இலங்கையின் தெற்கு கடற்கரையை அண்டிய கடற்பகுதியில் போதைப்பொருள் கடத்திச் சென்றதாக சந்தேகிக்கப்படும் பலநாள் மீன்பிடி படகொன்று இலங்கை கடற்படை மற்றும் பொலிஸ் போதைப்பொருள் பணியகத்தின் கூட்டு நடவடிக்கையில் கைப்பற்றப்பட்டுள்ளது.
படகில் இருந்த ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, குறித்த படகை கரைக்கு கொண்டு வரும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இந்தப் படகு மூலம் பெருமளவான போதைப்பொருள் கடத்தப்படவிருந்ததாக சந்தேகிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்டவர்கள் மற்றும் படகு தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.



