கடுவெல, ரணால பகுதியில் உள்ள அட்டைப்பெட்டி உற்பத்தி தொழிற்சாலை களஞ்சியசாலையில் இன்று (19) காலை தீப் பரவல் ஏற்பட்டுள்ளது.
தீப் பரவலின் காரணமாக தொழிற்சாலைக்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதாக நவகமுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு மற்றும் கோட்டை மாநகர சபைகளுக்கு சொந்தமான தீயணைப்பு படையினர் தீயைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.
தீப் பரவியமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும் சேதம் தொடர்பான மதிப்பாய்வுகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



