துன்கல்பிடிய பிரதேசத்தில் கைத்துப்பாக்கி மீட்பு

இராணுவ புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய ராஜகிரிய பொலிஸ் விஷேட அதிரடிப் படையினருடன் இணைந்து நேற்று (7) மாலை முன்னெடுத்த தேடுதலின்போது நீர்கொழும்பு துன்கல்பிடிய கடற்கரை வீதிக்கு அருகில் கைத்துப்பாக்கி ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பிரதேசத்திலுள்ள கடற்கரை அணுகல் வீதியின் அருகே மறைத்து வைக்கப்பட்டிருந்த 7.65 மில்லிமீற்றர் ரக கைத்துப்பாக்கி ஒன்றே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் துன்கல்பிடிய பொலிஸார் முன்னெடுத்து வருகின்றன.

Similar Posts