நுவரெலியா சாந்திபுர கழுகு காட்சி முனை (Eagle’s Viewpoint) இன்று (26) இல் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்காக திறக்கப்பட்டது.
இந்த முனை, கடல் மட்டத்திலிருந்து 6182 அடி உயரத்தில் அமைந்துள்ள இலங்கையின் மிக உயரமான கிராமமான சாந்திபுர கிராமத்தை சுற்றி அமைந்துள்ளது.
இந்த நிகழ்வு, வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜிதா ஹேரத் தலைமையில், விமானப்படைத் தளபதி எயர் மார்ஷல் உதேனி ராஜபக்ஷவின் பங்கேற்புடன் நடைபெற்றது.
2024 ஜூலை 31ஆம் திகதியன்று ஆரம்பமான இந்த கட்டுமானப் பணிகள், இலங்கை விமானப்படையின் உதவியுடன் முன்னெடுக்கப்பட்டது. சுற்றுலாத் துறையின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றும் இந்த திட்டம், இலங்கையை வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கான முக்கிய மற்றும் கவர்ச்சிகரமான இடமாக மாற்றும் நோக்கத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதற்கான நிதி பங்களிப்பை சுற்றுலா அபிவருத்தி அதிகாரசபை வழங்கியது.