Eagle’s Viewpoint சுற்றுலாப் பயணிகளுக்காக திறப்பு

Date:

நுவரெலியா சாந்திபுர கழுகு காட்சி முனை (Eagle’s Viewpoint) இன்று (26) இல் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்காக திறக்கப்பட்டது.

இந்த முனை, கடல் மட்டத்திலிருந்து 6182 அடி உயரத்தில் அமைந்துள்ள இலங்கையின் மிக உயரமான கிராமமான சாந்திபுர கிராமத்தை சுற்றி அமைந்துள்ளது.

இந்த நிகழ்வு, வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜிதா ஹேரத் தலைமையில், விமானப்படைத் தளபதி எயர் மார்ஷல் உதேனி ராஜபக்ஷவின் பங்கேற்புடன் நடைபெற்றது.

2024 ஜூலை 31ஆம் திகதியன்று ஆரம்பமான இந்த கட்டுமானப் பணிகள், இலங்கை விமானப்படையின் உதவியுடன் முன்னெடுக்கப்பட்டது. சுற்றுலாத் துறையின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றும் இந்த திட்டம், இலங்கையை வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கான முக்கிய மற்றும் கவர்ச்சிகரமான இடமாக மாற்றும் நோக்கத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதற்கான நிதி பங்களிப்பை சுற்றுலா அபிவருத்தி அதிகாரசபை வழங்கியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

அஞ்சல் தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்த போராட்டம்

அஞ்சல் திணைக்களத்தில் நிலவும் வெற்றிடங்களை நிரப்புவது உள்ளிட்ட 7 பிரச்சினைகளை அடிப்படையாகக்...

பாலியல் தொல்லை கொடுத்த பயணி கைது

சிங்கப்பூரிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த விமானத்தில் இரண்டு விமான பணிப்பெண்களுக்கு...

பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை தொடர்பில் ரணில் விசேட உரை

பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று...

இலவச விசா வசதிகள் வழங்கப்படும்

எதிர்காலத்தில், மேலும் சில நாடுகளின் வெளிநாட்டுப் பிரஜைகள் நாட்டிற்குள் நுழைவதற்கு இலவச...