பராட்டே சட்ட சலுகை காலம் நிறைவு
பராட்டே சட்ட சலுகை காலம் நாளை நள்ளிரவு முதல் இரத்து செய்யப்பட உள்ள நிலையில், தொழிலதிபர்களின் சொத்துக்கள் வங்கிகளின் உடைமை ஆக்கப்படலாம் என சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோர் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்த விடயத்தில் அரசாங்கம் தலையிட்டு, இந்த தொழிலதிபர்கள் தங்கள் கடன்களை செலுத்த சலுகை காலத்தை வழங்க வேண்டும் என சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோர் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
