நாட்டின் பல மாவட்டங்களில் நிலவும் மிக வெப்பமான வானிலையால் மக்கள் அதிக கவனம் செலுத்த வேண்டிய மட்டத்தில் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வானிலை ஆய்வு மையத்தின் இயற்கை பேரிடர் முன்னெச்சரிக்கை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பு அடுத்த 24 மணி நேரத்திற்கு செல்லுபடியாகும்.
இதன்படி வடமேற்கு, மேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் வெப்பக் குறியீடு, அதாவது மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை கவனம் செலுத்த வேண்டிய மட்டத்தில் இருப்பதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதேவேளை மக்கள் போதுமானளவு தண்ணீர் குடிக்க வேண்டும் என்றும், முடிந்தவரை நிழலான இடங்களில் ஓய்வெடுக்க வேண்டும் என்பதோடு இந்த விடயத்தில் முதியவர்கள் மற்றும் நோய்வாய்ப்பட்டவர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.