முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விஜேராம இல்லத்தில், பாதுகாப்புப் படையினர் நிறுத்தப்பட்ட பகுதிக்கு நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், 300,000 ரூபா நிலுவைத் தொகை செலுத்தப்படாத காரணத்தினால் இந்த நீர் விநியோகம் நிறுத்தப்பட்டது என கூறப்படுகிறது.
எனினும், மஹிந்த ராஜபக்ஷ தங்கியுள்ள பகுதியில் நீர் விநியோகம் தொடர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
முன்னாள் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நீர் விநியோகம் தொடர்பான கட்டணங்கள் ஜனாதிபதி செயலகத்தினால் செலுத்தப்படுவதாக அவரது ஊடகப் பேச்சாளர், சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்துள்ளார்.