பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்படும் பாதணிகளுக்கான வவுச்சர்களின் செல்லுபடியாகும் காலத்தை நீடிக்க கல்வி அமைச்சு முடிவு செய்துள்ளது.
அதன்படி அந்த வவுச்சர்களின் செல்லுபடியாகும் காலம் இன்றுடன் (28) முடிவடையும் என்று திட்டமிடப்பட்டிருந்தது.
இருப்பினும், மார்ச் 20 ஆம் திகதி வரை செல்லுபடியாகும் காலத்தை நீடித்துள்ளதாக கல்வி அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.