பாடசாலைக்கான மாணவர்களுக்கு எழுதுவினைப் பொருட்கள் வாங்குவதற்காக வழங்கப்படும் 6,000 ரூபா பெறுமதியான வவுச்சரின் செல்லுபடியாகும் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, நாளை (15) காலாவதியாகவிருந்த வவுச்சர் மார்ச் 31 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு ஒரு அறிக்கையை வெளியிட்டது.