மீகொட பகுதியில் கொக்கேய்ன் போதைப்பொருளை கொள்வனவு செய்வதற்காக மோட்டார் சைக்கிளில் இருவரை அழைத்து சென்ற அரச புலனாய்வு பிரிவின் உப பொலிஸ் பரிசோதகரை மீகொட பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மீகொட, கொடகம சந்திக்கு அருகிலுள்ள உடனடி வீதித் தடைக் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸாரும் விசேட அதிரடிப்படையும், 1130 மில்லி கிராம் கொக்கேய்ன் போதைப்பொருளுடன் மோட்டார் சைக்கிளில் வந்த இருவரை கைது செய்தனர்.
இருவரிடமும் மேற்கொண்ட விசாரணைகளில், அந்த போதைப்பொருள் விற்பனைக்காக கொண்டுவரப்பட்டு, ஒரு நபர் அதனை கொள்வனவு செய்ய கொடகம சந்திக்கு வரவிருந்தது தெரியவந்தது.
அதன்படி, போதைப்பொருள் வாங்க வந்த நபர் கைது செய்யப்பட்டு, அவர் அரச புலனாய்வு பிரிவின் உப பொலிஸ் பரிசோதகராக இருந்தது உறுதி செய்யப்பட்டது.
சந்தேகநபர் பணி முடிந்து புதன்கிழமை (12) வீட்டிற்குச் செல்லும் போது பாதுக்க குருகல பிரதேசத்தை சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர்.