ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது
பனாமுரே- மித்தெனியா வீதியில் லெல்லாவல பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காரொன்றில் பயணித்த வேளையில், பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் அவர்களிடமிருந்து 190 கிராம் ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட இருவரும் செவனகல பகுதியைச் சேர்ந்தவர்கள்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பனாமுரே மேற்கொண்டு வருகின்றனர்.
