ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது

Date:

கொட்டாஞ்சேனையில் ஐஸ் ரக போதைப்பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவின் புளூமெண்டல் ரயில் பாதைக்கு அருகில் நேற்று (24) கொட்டாஞ்சேனை பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவினால் நடத்தப்பட்ட சோதனையில், 12 கிராம் 400 மில்லிகிராம் ஐஸ் ரக போதைப்பொருள் மற்றும் 10 கிராம் 200 மில்லிகிராம் ஐஸ் ரக போதைப்பொருள் வைத்திருந்த 2 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் புளூமெண்டல் மற்றும் கொச்சிக்கடை பகுதியைச் சேர்ந்த 30 மற்றும் 31 வயதுடையவர்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், கடந்த 18 ஆம் திகதி இரவு கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புளூமெண்டல் ரயில் பாதைக்கு அருகில் கூரிய ஆயுதத்தால் ஒருவரைத் தாக்கி கொலை செய்த குற்றத்தில் இரண்டு சந்தேக நபர்கள் தொடர்புடையவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் கொட்டாஞ்சேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

அஞ்சல் தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்த போராட்டம்

அஞ்சல் திணைக்களத்தில் நிலவும் வெற்றிடங்களை நிரப்புவது உள்ளிட்ட 7 பிரச்சினைகளை அடிப்படையாகக்...

பாலியல் தொல்லை கொடுத்த பயணி கைது

சிங்கப்பூரிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த விமானத்தில் இரண்டு விமான பணிப்பெண்களுக்கு...

பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை தொடர்பில் ரணில் விசேட உரை

பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று...

இலவச விசா வசதிகள் வழங்கப்படும்

எதிர்காலத்தில், மேலும் சில நாடுகளின் வெளிநாட்டுப் பிரஜைகள் நாட்டிற்குள் நுழைவதற்கு இலவச...