சீதுவை லியனகேமுல்ல பகுதியில் நேற்று (12) இரவு நடத்தப்பட்ட சோதனையில், ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் ஒரு ஆண் மற்றும் பெண் சந்தேக நபர்களாக கைது செய்யப்பட்டுள்ளனர்
சீதுவை பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவிற்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையிலேயே இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, குறித்த சந்தேக நபர்களிடமிருந்து 568 கிராம் 220 மில்லிகிராம் ‘ஐஸ்’ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
குறித்த சந்தேகநபர்கள் மோட்டார் சைக்கிளில் போதைப்பொருளை கொண்டு செல்லும் போதே கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சீதுவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.