தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRC), TRC ஒப்புதல் பெறாத அலைபேசிகளின் பயன்பாட்டை தடுக்க புதிய மென்பொருளை அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளது.
பொதுமக்களிடத்தில், எதிர்காலத்தில் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் ஒப்புதலினின்றி எந்த அலைபேசிகளையும் வாங்காதிருப்பதை ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.
அத்துடன், அங்கீகரிக்கப்படாத அலைபேசிகளைப் பயன்படுத்துவதை தடுக்க TRC விரைவில் புதிய தானியங்கி அமைப்பை செயல்படுத்தப்போகின்றது என்று ஆணையத்தின் இயக்குநர் ஜெனரல் பந்துல ஹேரத் தெரிவித்துள்ளார்.