கொழும்பு பிரதான அமைப்பில் ஏற்பட்ட ஏற்றத்தாழ்வு காரணமாக இன்று (09) நாடளாவிய ரீதியில் மின்சாரம் தடைப்பட்டது. எவ்வாறாயினும், ரயில் போக்குவரத்தில் இதுவரை எவ்வித இடையூறும் ஏற்படவில்லை என திணைக்களம் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், ரயில் நிலையங்களில் அறிவிப்புகளை வெளியிட முடியாத நிலையில், ரயில்களை அடையாளம் காண முடியாமல் பயணிகள் சில சிரமங்களை எதிர்நோக்க வேண்டியுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.
மின்சாரத் தடையை சீர்செய்வதற்குத் தேவையான பணிகள் துரித கதியில் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அதற்கு சில மணித்தியாலங்கள் எடுக்கும் எனவும் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளர் உதயங்க ஹேமபால தெரிவித்துள்ளார்.