‘இஷார’வின் போதைப்பொருள் வலையமைப்பு முறியடிப்பு: 3 பேர் கைது

துபாயிலிருந்து நாட்டிற்குள் போதைப்பொருள் வலையமைப்பை நடத்தும் ‘துபாய் இஷார’ என்ற முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரருக்குச் சொந்தமான போதைப்பொருட்களை விற்பனை செய்த மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று சனிக்கிழமை (17) காலை கம்பளை பொலிஸாரால் குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களிடமிருந்து 5 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள் ஹெரோயின் போதைப்பொருளை கம்பளை, நாவலப்பிட்டிய, உலப்பனை, தொலுவ, கெலிஓயா, பேராதனை மற்றும் வெலிகல்ல போன்ற பகுதிகளுக்கு மோட்டார் சைக்கிள் மூலம் விநியோகித்து வந்துள்ளனர்.

கம்பளை – தொலுவ மற்றும் மஹர ஆகிய பகுதியில் குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.

கம்பளை – அங்கமன மற்றும் துந்தெனிய பகுதிகளை சேர்ந்த குறித்த சந்தேகநபர்களுக்கு கொழும்பில் இந்த போதைப்பொருட்கள் விநியோகிக்கப்படுவதாக தெரியவந்துள்ளது.

சந்தேகநபர்கள் 20 முதல் 22 வயதுக்குட்பட்டவர்கள் என தெரியவந்துள்ளது.

Similar Posts