மோட்டார் சைக்கிள் விபத்துக்களில் மூவர் உயிழப்பு

Date:

நாட்டில் நேற்றைய தினம் வெவ்வேறு இடங்களில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர்.

அதற்கமைய, கல்டெங்வெவ – ஹிரிபிட்டிய வீதியில் உள்ள தங்கொல்லாகம பகுதியில் மோட்டார் சைக்கிளின் சக்கரத்தில் சேலை சிக்கியதில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.

விபத்தில் படுகாயமடைந்த பெண் ஹிரிபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக குருநாகல் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.

உயிரிழந்தவர் நிகதலுபொத்த பகுதியைச் சேர்ந்த 53 வயதுடைய பெண் ஆவார்.

இதேவேளை, பத்தேகம – வந்துரப வீதியில் சுதுவெலிபத பகுதியில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் சுதுவெலிபொத்த பகுதியில் வசிக்கும் 50 வயதுடைய நபர் என தெரியவந்துள்ளது.

மேலும் கொழும்பு – கண்டி பிரதான வீதியில் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே நினைவு மேம்பாலம் அருகேஇ கொழும்பில் இருந்து கண்டி நோக்கிய வீதியில் இருந்து பாதசாரிகள் கடக்க முடியாத இடத்தில்இ அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று வீதியை கடக்கும் நபர் மீது மோதியதில் விபத்தொன்று ஏற்பட்டுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த பாதசாரிஇ கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.

உயிரிழந்தவர் பேலியகொட பகுதியில் வசிக்கும் 55 வயதுடைய நபர் என தெரியவந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

இலவச விசா வசதிகள் வழங்கப்படும்

எதிர்காலத்தில், மேலும் சில நாடுகளின் வெளிநாட்டுப் பிரஜைகள் நாட்டிற்குள் நுழைவதற்கு இலவச...

பட்டலந்த அறிக்கை விவாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகும்

பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை மீதான பாராளுமன்ற விவாதம் ஏப்ரல் மாதம் 10...

துப்பாக்கிகளுடன் 5 பேர் கைது

அஹுங்கல்ல, பல்லம, மாபலகம, மஹநான்னேரிய மற்றும் அம்பாறை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த...

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை, பொலன்னறுவை, நுவரெலியா மற்றும்...