அம்பலாந்தோட்டையில் மோதல் – மூவர் வெட்டி கொலை : 5 பேர் கைது

Date:

அம்பலாந்தோட்டை, மாமடல பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (02) இரவு இடம்பெற்ற மோதலில் மூன்று பேர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அறுவர் கொண்ட குழு, ஒரு வீட்டிற்குள் புகுந்து அங்கிருந்த மூவரை வெட்டிக் கொன்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த கொலைச் சம்பவம் ஞாயிற்றுக்கிழமை இரவு 07.30 மணியளவில் இடம்பெற்றதுடன், உயிரிழந்தவர்கள் முறையே 29, 34இ மற்றும் 45 வயதுடையவர்களாவர்.

ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், மற்ற இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தனர்.

சம்பவத்தில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, சட்டவிரோத மதுபான வியாபாரத்தில் ஈடுபட்ட இரு தரப்பினருக்கிடையேயான நீண்டகால தகராறின் விளைவாகவே இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படும்

புனித தந்த தாது சின்ன வழிபாடு காரணமாக கண்டியிலும் அதைச் சுற்றியுள்ள...

பலத்த மின்னல் ஏற்படும் அபாயம்: எச்சரிக்கை

இடியுடன் கூடிய மழையுடன் பலத்த மின்னல் ஏற்படும் அபாயம் குறித்து வளிமண்டலவியல்...

A/L பெறுபேறுகள் இன்றிரவு வெளியிடப்படும்

2024 ஆம் ஆண்டின் க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகள் இன்றிரவு வெளியிடப்படுமென...

பெசில் மீண்டும் அரசியலில்…

முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்ச மீண்டும் நேரடி அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளார். எதிர்வரும்...