9 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு சிகரெட்டுகளை கடத்த முயன்றதற்காக சுங்க அதிகாரி ஒருவர் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து சிகரெட்டுகளுடன் வெளியேற முயன்றபோது கைது செய்யப்பட்டனர்.
துபாயிலிருந்து வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒரு வர்த்தகரும் அவரது உதவியாளரும் இலங்கை வந்துள்ளனர்.
பின்னர் சுங்க அதிகாரி தனது உத்தியோகபூர்வ அடையாள அட்டையுடன் விமான நிலையத்திற்குள் நுழைந்து சிகரெட்டுகளை விமான நிலையத்திற்கு வெளியே எடுத்துச் செல்ல முயன்றார்.
இருப்பினும், பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு (PNB) அதிகாரிகள் அவர்களின் திட்டத்தை முறியடித்து, விமான நிலைய வளாகத்தில் அவர்களைக் கைது செய்தனர்.
சந்தேக நபர்களிடமிருந்து 300 அட்டைப்பெட்டிகள் வெளிநாட்டு சிகரெட்டுகளை PNB அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சந்தேக நபர்கள் இன்று நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.