அரசாங்கம் ஒருபோதும் அழுத்தங்களை பிரயோகிக்காது

Date:

மோசடி மற்றும் ஊழல் தொடர்பாக தனிநபர்களைக் கைது செய்வதிலும் சட்டத்தை அமுல்படுத்துவதிலும் பொலிஸ் உள்ளிட்ட சட்ட அமுலாக்க நிறுவனங்களுக்கு அரசாங்கம் எந்தவொரு அழுத்தங்களையும் பிரயோகிக்காது என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஹோமாகம, பிடிபன பகுதியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கருத்து தெரிவிக்கையில்: மக்கள் சந்திப்பில் பேசிய ஜனாதிபதி, சட்ட அமுல்படுத்தல் நிறுவனங்கள், குறிப்பாக பொலிஸாருக்கு, அரசாங்கத்தின் எந்த அழுத்தங்களும் இல்லை .

சில சட்ட அதிகாரிகள், முந்தைய அரசுகளின் தலையீட்டை தவிர்க்க வழக்குகளை தங்களிடம் வைத்திருந்தனர். ஆனால், தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின் அவர்கள் தங்கள் கடமைகளை சுதந்திரமாக செய்ய முடிகிறது.

தற்போதைய அரசாங்கத்தின் கீழ் குறுகிய காலத்தில் நாட்டில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளதால், சில எதிர்க்கட்சிகள் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

அடுத்த வரவு செலவுத் திட்டத்திற்கான அடிப்படை கொள்கை திட்டம் தயாரிக்கப்பட்டு விட்டதாக ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

போராட்டம் நடத்த தடை

வெலிக்கடை பொல்துவ சந்தியில் இன்று முதல் மார்ச் 21 ஆம் திகதி...

தவறான வதந்திகளை நம்ப வேண்டாம்: இ.தொ.கா

2025 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி மன்ற தேர்தலில் இ.தொ.கா உயர்மட்ட குழுவினரால்...

காட்டுக்கு சென்ற இளைஞன் சடலமாக மீட்பு

மாத்தளை, யடவத்த, ஹுலங்கல பிசோஎல்ல அருகே உள்ள காட்டுப்பகுதியில் சுமார் 400...

திட்டமிட்டபடி நாளை பணிப்புறக்கணிப்பு தொடரும்

ஏற்கனவே திட்டமிட்டபடி நாளை (18) காலை 7 மணி முதல் 24...