CID சுற்றிவளைப்பில் 2 கிலோ ஹெரோயினுடன் ஒருவர் கைது

Date:

முல்லேரியாவா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உதுமுல்லா பகுதியில் கொழும்பு குற்றப்பிரிவு பொலிஸ் அதிகாரிகள் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது 2 கிலோ ஹெரோயினுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

இந்த நடவடிக்கை, நாட்டிலுள்ள குற்றம் மற்றும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, இலங்கை பொலிஸாரின் நடப்பு செயற்திட்டத்தின் கீழ், இடைக்கால பொலிஸ் மா அதிபரின் உத்தரவின்படி நேற்று (28) அதிகாலை மேற்கொள்ளப்பட்டது.

சந்தேகநபரின் வீட்டில் நடைபெற்ற தேடுதல் நடவடிக்கையின் போது, 2 கிலோ 218 கிராம் ஹெரோயின், போதைப்பொருள் வர்த்தகத்தால் சம்பாதிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ரூ. 667,000 பணம், மூன்று கைபேசிகள், மற்றும் போதைப்பொருள் கடத்த பயன்படுத்திய கார் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.

கைது செய்யப்பட்டவர் 41 வயதுடைய முல்லேரியாவா பகுதியை சேர்ந்த ஒருவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

விசாரணைகளில், வெளிநாட்டில் வசிக்கும் ஒரு போதைப்பொருள் கடத்தல்காரரின் பணிப்புரையின் கீழ் சந்தேகநபர் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டிருந்தது தெரியவந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

அஞ்சல் தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்த போராட்டம்

அஞ்சல் திணைக்களத்தில் நிலவும் வெற்றிடங்களை நிரப்புவது உள்ளிட்ட 7 பிரச்சினைகளை அடிப்படையாகக்...

பாலியல் தொல்லை கொடுத்த பயணி கைது

சிங்கப்பூரிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த விமானத்தில் இரண்டு விமான பணிப்பெண்களுக்கு...

பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை தொடர்பில் ரணில் விசேட உரை

பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று...

இலவச விசா வசதிகள் வழங்கப்படும்

எதிர்காலத்தில், மேலும் சில நாடுகளின் வெளிநாட்டுப் பிரஜைகள் நாட்டிற்குள் நுழைவதற்கு இலவச...