குளியாப்பிட்டி, ஹெட்டிபொல பிரதேசத்தில் வியாழக்கிழமை (27) இரவு துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுமியின் மரணம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவரை ஹெட்டிபொல பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் மேற்கொண்ட விசாரணையின்படி, கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மகுலகம பகுதியைச் சேர்ந்த 48 வயதுடையவர் எனத் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்த 12-துப்பாக்கியையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.
மேலும், இச்சம்பவம் தொடர்பில் ஹெட்டிபொல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.