77ஆவது சுதந்திர தினத்தையொட்டி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் வாழ்த்து

Date:

அனைத்து இன மக்களதும் உயிர் தியாகங்களால் உயிர்பெற்ற எமது தாய் நாட்டின் 77ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் அனைத்து மக்களுக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மிகுந்த மகிழ்சிச்சியடைவதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் தனது சுதந்திர தின வாழ்த்துச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

“சுதந்திரம் என்பது ஒற்றை வார்த்தை அல்ல. சமாதானம், சகோதரத்துவம், சந்தோசம் ஆகியவற்றை உள்ளடக்கியதாகும். இந்த சிறப்புமிக்க சுதந்திரத்தை நமது நாடும், நாட்டு மக்களும் முழுமையாக அனுபவிக்க வேண்டும் என்பதோடு இனவாதமற்ற அனைத்தின மக்களும் நிம்மதியாகவும் ஒற்றுமையாகவும் வாழக்கூடிய சூழ்நிலைகளை ஏற்படுத்த வேண்டும்.

அதேபோல் நமது நாடு தற்போதைய சூழ்நிலையில் பொருளாதார ரீதியிலான பல்வேறு நெருக்கடிகளை எதிர்நோக்கியிருக்கின்ற சந்தர்ப்பத்தில் வளமான அபிவிருத்தியடைந்த நாட்டை உருவாக்க இந்த நாளில் அனைத்து மக்களும் உறுதியேற்றுக்கொள்வோம்.

இந்த தேசிய சுதந்திர தினத்தில், எமது தாய்நாட்டின் சுதந்திரத்திற்காக தம் உயிர்களை தியாகம் செய்த அனைவரையும் நாம் மரியாதையுடன் நினைவு கூர்வதோடு, அனைத்து சவால்களையும் முறியடித்து நாளைய விடியலுக்காக வளமான நாட்டை உருவாக்க அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவோம்” என அவரது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

ஓய்வூதியச் சட்டத்தை நீக்க அமைச்சரவை ஒப்புதல்

பாராளுமன்ற ஓய்வூதியச் சட்டத்தை (நீக்குதல்) நீக்குவதற்கான சட்டமூலத்தை பாராளுமன்றத்தின் ஒப்புதலுக்காகச் சமர்ப்பிப்பதற்கு...

நீர்ப்பாசன பணிப்பாளர் நாயகம் நியமனம்

நீர்ப்பாசன பணிப்பாளர் நாயகம் பதவியில் தற்போது கடமையாற்றிய ஐ.பி.ஏ.குணசேகர 2025.12.04 ஆம்...

கடலில் மிதந்து வந்த 200 கிலோ போதைப்பொருள் தொகை மீட்பு

பேருவளை கடலில் சந்தேகத்துக்கிடமான முறையில் மிதந்து வந்த இரண்டு பொதிகளை மேல்...

GMOA தொழிற்சங்க நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுப்பு

தமது பிரச்சினைகளுக்கு முறையான தீர்வு கிடைக்காததால் ஆரம்பிக்கப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கை தொடர்ந்தும்...