ஆன்லைன் விடுதி முன்பதிவு தளங்களுக்கு கட்டுப்பாடு

Date:

இலங்கை அரசாங்கம் ஆன்லைன் விடுதி முன்பதிவு (Online Hotel Booking) தளங்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது என வெளிநாட்டு விவகார மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

இன்று (06) பாராளுமன்றத்தில் பேசிய அவர், இந்த துறையில் ஒரு நிறுவனத்தின் ஆதிக்கத்தை குறைத்து, பல்வேறு முன்பதிவு தளங்களை அறிமுகப்படுத்த உள்ளூர் நிறுவனங்களுடன் கலந்துரையாடல்கள் நடைபெற்று வருவதாக கூறினார்.

“தற்போது, ஒரு நிறுவனமே இலங்கையின் பெரும்பாலான விடுதி முன்பதிவுகளை கட்டுப்படுத்தி வருகிறது. இதை சமநிலை செய்வதற்காக பல்வேறு தளங்களை அறிமுகப்படுத்த அரசு முயற்சி செய்கிறது. மேலும், தற்போது செயற்படும் தளங்கள் இலங்கையில் பதிவு செய்யப்படாமல், தேவையான வரிகளை செலுத்தாமல் செயல்பட்டு வருகின்றன. Booking.com போன்ற நிறுவனங்கள் இலங்கையிலிருந்து பெரும் லாபம் ஈட்டினாலும், நாட்டிற்கு வரி செலுத்துவதில்லை,” என்றார்.

மேலும், ஆஸ்திரேலியாவின் ப்ரிஸ்பேன் (Brisbane) நகரத்தில் உள்ள இலங்கையர்கள் குழுவொன்று, OTP அடிப்படையிலான மாற்று முன்பதிவு தளத்தை உருவாக்கியுள்ளதாகவும், இது ஆன்லைன் விடுதி முன்பதிவில் காணப்படும் ஒரே நிறுவனத்தின் ஆதிக்கத்தை குறைக்கும் முயற்சியாக அமைந்துள்ளதாகவும் அமைச்சர் ஹேரத் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படும்

புனித தந்த தாது சின்ன வழிபாடு காரணமாக கண்டியிலும் அதைச் சுற்றியுள்ள...

பலத்த மின்னல் ஏற்படும் அபாயம்: எச்சரிக்கை

இடியுடன் கூடிய மழையுடன் பலத்த மின்னல் ஏற்படும் அபாயம் குறித்து வளிமண்டலவியல்...

A/L பெறுபேறுகள் இன்றிரவு வெளியிடப்படும்

2024 ஆம் ஆண்டின் க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகள் இன்றிரவு வெளியிடப்படுமென...

பெசில் மீண்டும் அரசியலில்…

முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்ச மீண்டும் நேரடி அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளார். எதிர்வரும்...