விலங்குகளை வேட்டையாடிய கும்பல் கருவிகளுடன் சிக்கியது

Date:

விலங்குகளை வேட்டையாடியதற்காக ஆறு சந்தேக நபர்களை பேராதனை பொலிஸார், துப்பாக்கிகள், வெடிமருந்துகள் மற்றும் பிற உபகரணங்களுடன் கைது செய்துள்ளனர்.

இந்த சந்தேக நபர்கள் நேற்று (09) காலை விலங்குகளை வேட்டையாடுவதற்காக யஹலதென்ன பிரதேசத்திற்கு சென்ற அப்பகுதி மக்களால் பிடிக்கப்பட்டு, பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி, பேராதனை பொலிஸ் நிலையத்தில் இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள், சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்றுப் பார்வையிட்டபோது, ​​சுட்டுக் கொல்லப்பட்ட ஒரு பன்றியும், விலங்குகளை வேட்டையாட ஜீப்பில் வந்த 6 பேரும் இருந்துள்ளனர்.

அதன்படி, சந்தேகநபர்களிடம் போர 12 ரக தோட்டாக்கள் 3, ஒரு கோடாரி, ஒரு கைத்துப்பாக்கி, இரண்டு ட்ராகன் விளக்குகள் மற்றும் ஒரு கத்தியுடன் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 28 முதல் 71 வயதுக்குட்பட்ட மாவதகம பகுதியைச் சேர்ந்தவர்களாவர்.

மேலதிக விசாரணையின் போது, ​​பேராதனை பொலிஸ் நிலைய அதிகாரிகள், யஹலதென்ன பகுதியில் வீதியோரத்தில் உள்ள ஒரு காட்டுப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 12 ரக போர் துப்பாக்கியைக் கண்டுபிடித்தனர்.

சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டமை தொடர்பில், பேராதனை பொலிஸ் நிலையம் மாவதகம பொலிஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க நடவடிக்கை எடுத்துள்ளது.

பேராதனை பொலிஸாரும் மாவதகம பொலிஸாரும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

புதிதாக சிந்திப்போம், புதுமை காண்போம் வழிகாட்டல் தொகுப்பு பிரதமரிடம் கையளிப்பு

புதிதாகச் சிந்திப்போம், புதுமை காண்போம்' என்ற கருப்பொருளின் கீழ் ருஹூணு பல்கலைக்கழகத்தின்...

மஹிந்தவின் மனு தள்ளுபடி

முறையான மதிப்பீடின்றி தமக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு அதிகாரிகளின் எண்ணிக்கையை 60 ஆக...

கட்டுப்பணம் செலுத்திய ஜேர்மனி பெண்

மாத்தளை மாவட்டத்தில் உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்காக ஜேர்மனி நாட்டவர் ஒருவர் வைப்புத்தொகை...

பட்டலந்த அறிக்கை: கே.டி. லால் காந்தவை விசாரிக்க கோரிக்கை

பட்டலந்த அறிக்கை தொடர்பான விவகாரங்களில் அமைச்சர் கே.டி. லால் காந்தவை விசாரிக்க...