ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமிலிருந்து மேற்கே 200 கிமீ தொலைவில் அமைந்துள்ள ஓரேப்ரோ நகரில், வயது வந்தோருக்கான கம்பஸ் ரிஸ்பெர்க்ஸ்கா பள்ளியில் இன்று (05) பயங்கர துப்பாக்கிச்சூடு சம்பவம் இடம்பெற்றது.
பாடசாலையில் தங்கியிருந்த சில மாணவர்களை இலக்காகக் கொண்டு மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டதில், 10 பேர் உயிரிழந்தனர். பின்னர், சம்பவத்திற்குப் பொறுப்பான நபர் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.