காலி, மாத்தறை, களுத்துறை, இரத்தினபுரி மாவட்டங்கள் சில இடங்களில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா, வடமத்திய மாகாணங்கள் மற்றும் காலி, மாத்தறை, குருநாகல் மாவட்டங்களில்சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டம் ஏற்படக்கூடும். கிழக்கு மாகாணத்தில் சிறிதளவில் மழை பெய்யக்கூடும்.
வடகிழக்கு திசையில் மணிக்கு 20-30 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசு கூடுவதுடன் கொழும்பிலிருந்து புத்தளம் வழியாக மன்னார் வரை மற்றும் மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரை கடற்பரப்புகளில், காற்றின் வேகம் அவ்வப்போது மணிக்கு 40-50 கிலோமீட்டர் வரை அதிகரிக்கக்கூடும்.
கடற்பரப்புகளில், கடல் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாக இருக்கக்கூடும். இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடியதால், பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.