முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் (ITAK) மூத்த தலைவருமான மறைந்த மாவை சேனாதிராஜாவின் பூதவுடலுக்கு, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று (31) அஞ்சலி செலுத்தினார்.
இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த ஜனாதிபதி, அன்னாரின் இல்லத்திற்கு சென்று அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து அஞ்சலி செலுத்தினார்.
