மதுபோதையில் விபத்தை ஏற்படுத்திய அதிகாரி பணிநீக்கம்

Date:

இரத்மலானை பகுதியில் மதுபோதையில் பொலிஸ் ஜீப் ஒன்றை செலுத்தி, முச்சக்கர வண்டியுடன் மோதிய பின்னர் தப்பிச் சென்ற பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக குறித்த அதிகாரி பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சமூக ஊடகங்களில் பரவிய காணொளியில், விபத்தில் சிக்கிய முச்சக்கர வண்டியும், அதனுடன் மோதி விபத்தை ஏற்படுத்திய பொலிஸ் ஜீப் வாகனமும் காணப்பட்டன. விபத்திற்குப் பிறகு, ஜீப் வாகனம் நிற்காமல் தொடர்ந்ததாகவும் காணொளியில் பதிவாகியுள்ளது.

இந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை (28) இரத்மலானை பகுதியில் இடம்பெற்றது. அதே நாளில் கல்கிசை பொலிஸ் நிலையம் குறித்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி, ஜீப் வாகனத்தை ஓட்டிய பொலிஸ் கான்ஸ்டபிளை கைது செய்துள்ளது.

மேலும், விசாரணைகளில் அந்த பொலிஸ் அதிகாரி மதுபோதையில் வாகனம் செலுத்தியது உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, சந்தேக நபர் கல்கிசை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக கல்கிசை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

பாராளுமன்ற ஒன்றியத்தின் உறுப்பினர்களுக்கு இரு நாள் வதிவிட செயலமர்வு

திறந்த பாராளுமன்ற முன்னெடுப்புக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் உறுப்பினர்களுக்கு இரண்டு நாள் வதிவிட...

வானிலை முன்னறிவிப்பு

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மாத்தளை, நுவரெலியா மாவட்டங்களிலும்...

பாராளுமன்றில் ஜீவன் சீற்றம்

சௌமிய மூர்த்தி தொண்டமானின் பெயரில் ஞாபகார்த்த மண்டபம் உருவாக்கியது சாபக்கேடு ஆளும்...

அமெரிக்காவில் பனிப்புயல் : 100 மில்லியன் மக்கள் பாதிப்பு

அமெரிக்கா முழுவதும் 100 மில்லியன் மக்கள் பேரழிவு தரும் குளிர்கால வானிலையை...