பிள்ளையான் மீது உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக குற்றச்சாட்டுகள்!

Date:

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப்பரராசிங்கம் படுகொலை தொடர்பில் சிறைத்தண்டனை அனுபவித்திருந்தபோது, நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சருமான பிள்ளையான் (சிவனேசதுரை சந்திரகாந்தன்) உயிர்த்த ஞாயிறு தாக்குதலிற்கான திட்டமிடலில் ஈடுபட்டதாக அவரது முன்னாள் செயலாளர் ஆசாத் மௌலானா தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆசாத் மௌலானா, பிரிட்டனின் செனல் 4 தொலைக்காட்சிக்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கும் இதுகுறித்து தகவல்கள் வழங்கியுள்ளார் என டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது. இதை தொடர்ந்து, பாதுகாப்பு தரப்பினர் இந்த குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யத் தொடங்கியுள்ளனர்.

மேலும், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகள் தொடரும் நிலையில், தேசிய புலனாய்வு பிரிவில் பணியாற்றிய சில முன்னாள் உயர் அதிகாரிகளுக்கு நாட்டைவிட்டுச் செல்ல தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பிள்ளையான் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்த ஆசாத் மௌலானாவுடன் தொடர்பு கொண்ட அதிகாரிகள், அவர் முன்வைத்த தகவல்கள் சி.ஐ.டி. அதிகாரி ரவி செனிவிரட்ண தெரிவித்த விவரங்களுடன் ஒத்துப்போகின்றன என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், சி.ஐ.டி. அதிகாரிகள் பலமுறை பிள்ளையானை விசாரணை செய்துள்ளதுடன், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக சம்பந்தப்பட்ட மற்றவர்களை விசாரணைக்கு உட்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப்பரராசிங்கம் கொலை தொடர்பில் சிறைத்தண்டனை அனுபவித்தபோதே, உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரிகள் ஜஹ்ரான் குழுவின் உதவியை பெறுவதற்காக பிள்ளையான் முயற்சி செய்ததாக பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

தவறான வதந்திகளை நம்ப வேண்டாம்: இ.தொ.கா

2025 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி மன்ற தேர்தலில் இ.தொ.கா உயர்மட்ட குழுவினரால்...

காட்டுக்கு சென்ற இளைஞன் சடலமாக மீட்பு

மாத்தளை, யடவத்த, ஹுலங்கல பிசோஎல்ல அருகே உள்ள காட்டுப்பகுதியில் சுமார் 400...

திட்டமிட்டபடி நாளை பணிப்புறக்கணிப்பு தொடரும்

ஏற்கனவே திட்டமிட்டபடி நாளை (18) காலை 7 மணி முதல் 24...

வெசாக் பண்டிகையை நுவரெலியாவில் கொண்டாட தீர்மானம்

இந்த ஆண்டு தேசிய வெசாக் பண்டிகை நுவரெலியாவில் மலையக மக்களுடன் இணைந்து...