யாழ்ப்பாணம் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டமானது இன்றையதினம் (31) ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் பங்குபற்றுதலுடன் ஆரம்பமாகியது.

இதில் அமைச்சர்களான சந்திரசேகரன், பிமல் ரத்நாயக்க, நாடாளுமன்ற உறுப்பினர்களான சிறீதரன், இராமநாதன் அர்ச்சுனா, கஜேந்திரகுமார் பொன்னம்பலம், இளங்குமரன், ரஜீவன், பவானந்தராஜா, வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகன், யாழ்ப்பாணம் மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன், வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் திலக் தனபால, இராணுவ உயர் அதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகள், கடற்படை அதிகாரிகள், யாழ்ப்பாணம் மாவட்ட செயலக அதிகாரிகள், பிரதேச செயலர்கள், ஊடகவியலாளர்கள் என பலர் கலந்துகொண்டனர்.