பாராளுமன்ற கூட்டத்தொடர் ஆரம்பம்

Date:

பிரதி சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற கூட்டத்தொடர் சற்றுமுன் ஆரம்பமாகியது.

இன்றைய நாளில் மு.ப. 10.00 – மு.ப. 11.00 மணிவரை வாய்மூல விடைக்கான வினாக்கள் இடம்பெறவுள்ளதோடு, மு.ப. 11.00 – மு.ப. 11.30 வரை பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்களும் மு.ப. 11.30 – பி.ப. 5.00 வரை தனியார் உறுப்பினர் பிரேரணை பிரேரிக்கப்படவுள்ளன.

தோட்டங்கள் சார்ந்து காணப்படுகின்ற வீதிகளை அரசாங்கத்திற்குச் சுவீகரித்தல் (ஹேஷா விதானகே அங்கும்புர ஆரச்சி)

கூட்டுறவுச் சங்கங்களுக்கு பொருட்களைக் கொள்வனவு செய்யும் செயல்முறைக்கு முறையான பெறுகை வேலைத்திட்டமொன்றைத் தயாரித்தல் (கிங்ஸ் நெல்சன்)

அரசாங்கம் வசம் அரிசி கையிருப்பினை பேணிச் செல்வதற்காக வேலைத் திட்டமொன்றைத் தயாரித்தல் (ரோஹண பண்டார)

தொழிலாளர் நலன்புரி அலுவலர்களை நியமனஞ் செய்வதற்கு பொருத்தமான முறையியலொன்றைத் தயாரித்தல் (சமிந்த விஜேசிறி)

பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத் திட்டத்தை நீக்குதல் ( ரவி கருணாநாயக்க)

கொவிட்-19 தொற்றினால் உயிரிழந்தவர்களின் சடலங்களை நல்லடக்கம் செய்வதைத் தவிர்த்து தகனம் செய்தமை தொடர்பில் விசாரணை செய்து பொருத்தமான விதப்புரைகளைச் சமர்ப்பிப்பதற்காக பாராளுமன்ற விசேட குழுவொன்றை நியமித்தல் ( சட்டத்தரணி ரஊப் ஹகீம்)

பி.ப. 5.00 – பி.ப. 5.30 மணிவரை ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (எதிர்க்கட்சி) இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

தேசபந்து தென்னகோனுக்கு விளக்கமறியல்

இன்று (19) காலை மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்த பொலிஸ் மா...

புதிதாக சிந்திப்போம், புதுமை காண்போம் வழிகாட்டல் தொகுப்பு பிரதமரிடம் கையளிப்பு

புதிதாகச் சிந்திப்போம், புதுமை காண்போம்' என்ற கருப்பொருளின் கீழ் ருஹூணு பல்கலைக்கழகத்தின்...

மஹிந்தவின் மனு தள்ளுபடி

முறையான மதிப்பீடின்றி தமக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு அதிகாரிகளின் எண்ணிக்கையை 60 ஆக...

கட்டுப்பணம் செலுத்திய ஜேர்மனி பெண்

மாத்தளை மாவட்டத்தில் உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்காக ஜேர்மனி நாட்டவர் ஒருவர் வைப்புத்தொகை...