மக்கள் எதிர்பார்க்கும் சேவைகள் நிறைவேற்றப்படவில்லை

Date:

நாட்டின் தற்போதைய நிலையைப் பார்க்கும் போது மக்கள் எதிர்பார்க்கும் சேவைகள் நிறைவேற்றப்படவில்லை. மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாது சொல்வதைச் செய்யாத போக்கு காணப்படுகின்றன. மக்களுக்கு நிறைவேற்ற முடியாத எதிர்பார்ப்புகளை வழங்கி விட்டு திணறி வருகின்றனர். வலுவான வேலைத்திட்டமும் அதற்குத் தேவையான தொலைநோக்குப் பார்வையும் இந்த அரசாங்கத்திடம் இல்லை என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா, திவுலப்பிட்டிய அமைப்பாளர் எட்வர்ட் குணசேகர அவர்கள் திவுலப்பிட்டிய பிரதேசத்தில் இன்று (28) ஏற்பாடு செய்யப்பட்ட மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

பேச்சுக்கள் நன்றாக இருந்தாலும் செயல் பலவீனமாகவும் மெத்தன போக்கிலும் காணப்படுகின்றன. மக்களின் எதிர்பார்ப்புகள் ஏமாற்றமடைந்துள்ளன என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகள் ஏற்படும் போது மாற்று வாழ்வாதார ஏற்பாடுகளை அறிமுகப்படுத்தப்பட வேண்டும், ஆனால் அவ்வாறான புதிய ஏற்பாடுகள் இந்த அரசிடம் இல்லை. பொருட்களுக்கு கூட தட்டுப்பாடுகள் நிலவுகின்றன. அரிசி, தேங்காய்க்கு கூட தட்டுப்பாடு இருப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இறக்குமதி பொருட்களுக்கு கூட தட்டுப்பாடுகள் நிலவுகின்றன. மின்சார கட்டணம் 33% குறைக்கப்படும் என்று கூறப்பட்டாலும், இன்னும் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. மின்சார சபைக்கு அதிக இலாபம் கிடைத்தாலும் மக்களுக்கு அந்த இலாபம் கிடைத்தபாடில்லை. பொதுமக்களின் விமர்சனங்களுக்கு மத்தியில் 20% மின்சாரக் கட்டணம் குறைக்கப்பட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இன்று கூட்டுறவு சங்கத் தேர்தல்களின் மூலம் மக்களின் அபிப்பிராயம் வெளிப்படுத்தப்பட்டு வருகின்றன. மக்களின் எதிர்ப்பு அரசாங்கத்து சுமையாக மாறியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார். உர மானியத்தை கூட முறையாக வழங்க முடியாத அரசு, பரிசோதனைகள் இன்றி 328 கொள்கலன்களை சிவப்பு அறிவிப்புடன் விடுவித்துள்ளன.

அரச உத்தியோகத்தர்கள் சம்பள உயர்வை எதிர்பார்த்து இருக்கின்றனர். தனியார் துறையிலும் அரச சேவையிலும் சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும். பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக மக்களுக்காக என்றும் குரல் எழுப்புவோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

தற்காலிகமாக மூடப்படவுள்ள ரயில் பாதை

களனிவெளி ரயில் பாதையில், பேஸ்லைன் வீதி மற்றும் நாரஹேன்பிட்ட ரயில் நிலையங்களுக்கு...

கெரி ஆனந்தசங்கரிக்கு புதிய அமைச்சு பதவி

கனடாவின் புதிய பொதுப் பாதுகாப்பு அமைச்சராக இலங்கைத் தமிழரான கெரி ஆனந்தசங்கரி...

முன்னாள் விவசாய அமைச்சர் முன்பிணை கோரி மனு தாக்கல்

முன்னாள் விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே கடந்த 2021 ஆம் ஆண்டில்...

கொத்மலை பஸ் விபத்து: இழப்பீடு பணம் பிரதேச செயலகங்களுக்கு அனுப்பிவைப்பு

கொத்மலை, கெரண்டிஎல்ல பகுதியில் கடந்த 11ஆம் திகதி ஏற்பட்ட பஸ் விபத்தில்...