தேசிய மக்கள் சக்தியின் தலைவர்கள் இன்று (19) காலை தேர்தல் ஆணைய அதிகாரிகளை சந்திக்க உள்ளனர்.
அதற்காக கட்சியின் செயலாளர் டொக்டர் நிஹால் அபேசிங்க உள்ளிட்டோர் இணையவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகள் குறித்து தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்களுடன் கலந்துரையாடப்படவுள்ளது.
இதேவேளை, உள்ளூராட்சி மன்ற வாக்கெடுப்பு தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் புதன்கிழமை (18) விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.