அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் விரைவில் புதிய வாகனங்கள் வழங்கப்படும் என தேசிய மக்கள் சக்தியின் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தர்மப்பிரிய திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
“அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் புதிய வாகனத்தைப் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கிறோம். எம்.பி.க்களுக்கு இதுவரை வாகனங்கள் வழங்கப்படவில்லை.
ஒரு அமைச்சருக்கோ அல்லது பாராளுமன்ற உறுப்பினருக்கோ தமது கடமைகளை நிறைவேற்றுவதற்கு வாகனம் தேவை – அதனை நாங்கள் மறுக்க முடியாது,” என வடமேல் மாகாண இயந்திரவியல் மற்றும் உபகரண அதிகார சபையின் குருநாகலில் ஆய்வுச் சுற்றுப்பயணத்தின் போது செய்தியாளர்களிடம் பேசுகையில் அவர் கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “எம்.பி.க்களுக்கு வாகனங்கள் வழங்குவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது. குறிப்பிட்ட மாதிரி முடிவு செய்யப்படவில்லை என்றாலும், அவை நிச்சயமாக புதியதாக இருக்கும், அடுத்த இரண்டு மாதங்களுக்குள் வந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இயந்திர மற்றும் உபகரண அதிகார சபையின் தற்போதைய நிலை குறித்து கருத்து தெரிவித்த திஸாநாயக்க, “முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில், சேதமடைந்த வாகனங்களை இந்த இடத்தில் நிறுத்துமாறு நிறுவனங்களின் தலைவர்கள் அறிவுறுத்தியதாக எமக்கு தகவல்கள் கிடைத்துள்ளன” என்றார்.
மேலும், “இந்த வசதிக்கு அரசு நிறுவனங்களிடமிருந்து ஆதரவு இல்லை. பல வாகனங்கள் வேறு இடங்களில் பழுது பார்க்கப்படுகிறது.
எதிர்காலத்தில் அனைத்து அரசு வாகனங்களும் இங்கு பழுது பார்க்கப்படுவதை உறுதி செய்ய திட்டமிட்டுள்ளோம்.
எம்.பி.க்களுக்கு விரைவில் புதிய வாகனங்கள்
Date: