மன்னார் துப்பாக்கி சூடு: ஐவருக்கு விளக்கமறியல்

Date:

மன்னார் நீதிமன்றத்திற்கு முன்பாக கடந்த ஜனவரி 16 ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடையதாக கைது செய்யப்பட்ட 5 சந்தேக நபர்களையும் பெப்ரவரி 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், புதன்கிழமை (29) கைது செய்யப்பட்ட மற்றொரு சந்தேகநபரை, விசாரணைக்காக வியாழக்கிழமை (30) வரை பொலிஸ் தடுப்புக் காவலில் வைத்திருக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

இந்த சம்பவத்தில் இருவர் உயிரிழந்ததுடன், பெண் ஒருவர் உள்ளிட்ட இருவர் படுகாயமடைந்தனர். இதன் பின்னணியில் மன்னார் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் பணிப்புரையின் பேரில் விசேட பொலிஸ் குழுக்கள் அமைக்கப்பட்டு தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் போது, பிரதான சந்தேகநபர்கள் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்ட,மூவர் இராணுவத்துடன் தொடர்புடையவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

புதன்கிழமை (29) மன்னார் நீதிமன்றத்தில் நடந்த விசாரணையின் போது, இந்த 5 பேரையும் விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

தங்கம் விலை மீண்டும் எகிறியது

உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்துள்ள அதேவேளை, அதற்கு இணையாக உள்நாட்டு...

முன்னாள் சபாநாயகர் கைது

சப்புகஸ்கந்த பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பில் முன்னாள் சபாநாயகர் அசோக...

கர்ப்பிணித் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து கொடுப்பனவு

நாட்டில் தற்போது நிலவும் அனர்த்த நிலைமை மற்றும் எதிர்வரும் பண்டிகைக் காலத்தை...

காணாமல் போனோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

அனர்த்த நிலமைகள் தொடர்பான விரிவான அறிக்கையின் சாராம்சத்தை அனர்த்த முகாமைத்துவ நிலையம்...