மன்னார் துப்பாக்கி சூடு: ஐவருக்கு விளக்கமறியல்

Date:

மன்னார் நீதிமன்றத்திற்கு முன்பாக கடந்த ஜனவரி 16 ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடையதாக கைது செய்யப்பட்ட 5 சந்தேக நபர்களையும் பெப்ரவரி 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், புதன்கிழமை (29) கைது செய்யப்பட்ட மற்றொரு சந்தேகநபரை, விசாரணைக்காக வியாழக்கிழமை (30) வரை பொலிஸ் தடுப்புக் காவலில் வைத்திருக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

இந்த சம்பவத்தில் இருவர் உயிரிழந்ததுடன், பெண் ஒருவர் உள்ளிட்ட இருவர் படுகாயமடைந்தனர். இதன் பின்னணியில் மன்னார் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் பணிப்புரையின் பேரில் விசேட பொலிஸ் குழுக்கள் அமைக்கப்பட்டு தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் போது, பிரதான சந்தேகநபர்கள் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்ட,மூவர் இராணுவத்துடன் தொடர்புடையவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

புதன்கிழமை (29) மன்னார் நீதிமன்றத்தில் நடந்த விசாரணையின் போது, இந்த 5 பேரையும் விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

பிறப்பு அத்தாட்சிப் பத்திரத்துக்கு தந்தையின் பெயர் அவசியமில்லை

குழந்தை பிறந்தவுடன் பிறப்பு அத்தாட்சிப்பத்திரம் பதியும்போது பெற்றோர் திருமணம் முடித்துள்ளார்களா என்பது...

ஜகத் விதானகேயின் மகனுக்கு விளக்கமறியல்

சட்டவிரோதமாக பொருத்தப்பட்ட வாகனத்தை வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஐக்கிய மக்கள்...

பலத்த காற்று தொடர்பில் எச்சரிக்கை

பலத்த காற்று தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை அறிவிப்பை விடுத்துள்ளது.  மேல், சப்ரகமுவ,...

சட்டமா அதிபர் திணைக்களத்தில் புதிய நியமனம்

சட்டமா அதிபர் திணைக்களத்தின் குற்றவியல் பிரிவின் தலைவராக சொலிசிட்டர் ஜெனரல் விராஜ்...