
இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தின், பிரயாக்ராஜில் மஹா கும்பமேளாவின் கடைசி நாளான இன்று (26) இதுவரை 81 இலட்சம் பேர் புனித நீராடியுள்ளதாக உத்தரப் பிரதேச மாநில அரசு தகவல் தெரிவித்துள்ளது.
கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய நதிகளும் ஒன்றாகச் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் கும்பமேளா நிகழ்வு கடந்த ஜனவரி 13 முதல் நடைபெற்று வருகின்றது. கும்பமேளாவின் இறுதி நாளான இன்று இதுவரை 81 இலட்சம் பேர் புனித நீராடியுள்ளனர்.
கும்பமேளா தொடங்கியதிலிருந்து சாதுக்கள், நாக சாதுக்கள், சுற்றுலாப் பயணிகள், அரசியல் கட்சித் தலைவர்கள், தொழிலதிபர்கள், பிரபலங்கள், நடிகை, நடிகர்கள் என அதிகமானோர் புனித நீராடியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
