எதிர்வரும் ஏப்ரல் மாதத்தின் இரண்டாவது அல்லது நான்காவது வாரத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடத்த தேர்தல் ஆணைக்குழு நடவடிக்கை எடுக்குமென தான் நம்புவதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
மேலும், உள்ளூராட்சி தேர்தலை நடத்துவதற்கான வரைவு மசோதாவை அனைத்து கட்சிகளும் கூட்டாக பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.