சில மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு

நாட்டின் சில மாவட்டங்களுக்கு இரண்டாம் நிலை மற்றும் முதலாம் நிலை மண்சரிவு எச்சரிக்கைகள் நீடிக்கப்பட்டுள்ளன.

இரண்டாம் நிலை மண்சரிவு எச்சரிக்கை

கண்டி மாவட்டத்தின், உடுதும்பர, கங்க இஹல கோரளை, பாததும்பர, தொலுவ, யடிநுவர, மாவனெல்ல

கேகாலை மாவட்டத்தின், கேகாலை, அரநாயக்க, தெஹியோவிட்ட, யட்டியாந்தோட்டை, மாவனெல்ல

மாத்தளை மாவட்டத்தின் அம்பன்கங்கை கோரளை, உக்குவலை, ரத்தோட்டை, வில்கமுவ, லக்கல, பல்லேகம

நுவரெலியா மாவட்டத்தின் வலப்பனை, அம்பகமுவ, நிலதண்டாஹீன்ன

இரத்தினபுரி மாவட்டத்தின் கலவானை, அயகம, கிரியெல்ல மற்றும் இரத்தினபுரி

மொனராகலை மாவட்டத்தின் பதல் கும்பர

பதுளை மாவட்டத்தின் ஹல்துமுல்லை

காலி மாவட்டத்தின் நியாகம

மேலும் பதுளை, காலி, ஹம்பாந்தோட்டை, கண்டி, கேகாலை, குருநாகல், மாத்தளை, மொனராகலை, நுவரெலியா, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களின் 23 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு முதலாம் கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Similar Posts