கொட்டாஞ்சேனையில் வெள்ளிக்கிழமை (21) இரவு கல்பொத்த வீதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் சம்பவத்தில் ஈடுபட்ட துப்பாக்கிதாரிகள் இருவர் கிராண்ட்பாஸ் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உயிரிழந்தவர் 37 வயதுடைய சசி குமார் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு அடையாளம் தெரியாத நபர்கள், T-56 துப்பாக்கியை பயன்படுத்தி இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளனர்.
கடை ஒன்றில் இருந்தவரை இலக்காக கொண்டு இந்த துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
துப்பாக்கிச் சூடு நடத்திய இரண்டு சந்தேக நபர்களும் கிரேன்ட்பாஸ் பகுதியில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதோடு, துப்பாக்கியும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டது.
இந்தநிலையில், கொட்டாஞ்சேனையில் வெள்ளிக்கிழமை (21) இரவு துப்பாக்கிச் சூடு நடத்தியதாக கூறப்படும் சந்தேக நபர்கள் இருவர் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்
நேற்று இரவு (21) மறைத்து வைத்திருந்த ஆயுதங்களைக் காட்ட பொலிஸார் சந்தேகநபர்களை அழைத்துச் சென்றபோது, பொலிஸாரிடம் இருந்த துப்பாக்கியைப் பறித்து அவர்களைச் சுட முயன்ற போது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் சந்தேகநபர்கள் இருவரும் உயிரிழந்துள்ளனர்.