சுயாதீன வழக்கு தொடுனர் அலுவலகம் நிறுவப்படும் போது சட்டமா அதிபர் அல்லது சட்டமா அதிபர் திணைக்களம் ரத்துச் செய்யப்படாது என்று அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இன்று (11) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போது, இந்த புதிய நிறுவனத்தின் செயல்பாடு, சட்டமா அதிபர் திணைக்களத்தை விட திறம்பட சேவைகளை வழங்குவதற்காக திட்டமிடப்பட்டுள்ளது என்று அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ கூறினார்.
அதே சமயத்தில், சட்டமா அதிபர், சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் இதில் பிரதிநிதித்துவப்படுத்தப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.