நோயாளர்களுக்கான உணவுகள் வெளியே விற்பனை – பணிப்பாளருக்கு அச்சுறுத்தல்

Date:

தேசிய கண் வைத்தியசாலையில் நோயாளர்களுக்கு வழங்கப்படும் உணவுகள் வெளியில் கொண்டு செல்லப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றதென வைத்தியசாலையின் கட்டுப்பாட்டுப் பிரிவுக்கு திடைத்த தகவலினடிப்படையில் உணவுகள் விற்பனை செய்யப்பட்டமை தொடர்பில் ஆராய்ந்த தேசிய கண் வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் விசேட வைத்தியர் ஜயரூவன் பண்டாரவுக்கு சமையலறை பணியாளர்களால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த விற்பனை தொடர்பில் சமையலறை பணியாளர்கள் இருவரை அழைத்து விசாரணை நடத்திய நிலையில் இவ்வாறு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் விசாரணை நடத்துமாறு சுகாதார அமைச்சுக்கு 3 மாதங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டிருந்த போதிலும் இதுவரையில் விசாரணை நடத்தப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் இவ்வாறு உணவுகள் வைத்தியசாலைக்கு வெளியில் கொண்டு செல்லப்பட்டு விற்பனை செய்யப்படும் சம்பவங்கள் தொடர்பான சி.சி.ரி.வி காணொளி காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

போராட்டம் நடத்த தடை

வெலிக்கடை பொல்துவ சந்தியில் இன்று முதல் மார்ச் 21 ஆம் திகதி...

தவறான வதந்திகளை நம்ப வேண்டாம்: இ.தொ.கா

2025 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி மன்ற தேர்தலில் இ.தொ.கா உயர்மட்ட குழுவினரால்...

காட்டுக்கு சென்ற இளைஞன் சடலமாக மீட்பு

மாத்தளை, யடவத்த, ஹுலங்கல பிசோஎல்ல அருகே உள்ள காட்டுப்பகுதியில் சுமார் 400...

திட்டமிட்டபடி நாளை பணிப்புறக்கணிப்பு தொடரும்

ஏற்கனவே திட்டமிட்டபடி நாளை (18) காலை 7 மணி முதல் 24...