அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் நாளை (05) முதல் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டிருந்த நாடளாவிய வேலைநிறுத்தப் போராட்டத்தை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு இன்று (04) பிற்பகல் முடிவு செய்துள்ளது.
சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவுடன் இன்று பிற்பகல் நடைபெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அதன் செயலாளர் டொக்டர் பிரபாத் சுகதபால தெரிவித்தார்.