நாட்டில் நடைமுறையில் உள்ள எரிபொருளின் விலையில் மாற்றம் ஏற்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாதாந்திர எரிபொருள் விலை திருத்த முறைமையின் கீழ் இந்த மாற்றம் மேற்கொள்ளப்படலாம்.
கடந்த மாதம் மண்ணெண்ணெயின் விலையே மாற்றப்பட்ட நிலையில், ஏனைய எரிபொருட்களின் விலையை மாற்றாமல் இலங்கை கனியவள கூட்டுத்தாபனம் தீர்மானித்தது. இதன்படி, மண்ணெண்ணெய் லீட்டர் ஒன்றின் விலை 188 ரூபாவிலிருந்து 183 ரூபாவாக குறைக்கப்பட்டது.
இந்நிலையில், லங்கா சூப்பர் டீசலின் விலையை 18 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு அதன் புதிய விலை 331 ரூபாயாக உயர்ந்துள்ளது.
இருப்பினும், மற்ற விலைகளில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை என பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.