முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (03) சர்வதேச ஊடகவியலாளர் சந்திப்பில் பங்கேற்க லண்டன் பயணம் மேற்கொண்டுள்ளார்.
இந்தப் பயணத்தின் போது, அவர் அல் ஜசீரா ஊடக வலையமைப்பின் ஏற்பாட்டில் நடைபெறும் சர்வதேச செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொள்வார்.
இம்மாநாட்டில், இலங்கையின் ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகள், மனித உரிமை மீறல்களை தடுக்கும் முயற்சிகள், மற்றும் ஈஸ்டர் தாக்குதலின்போது பிரதமராக இருந்தபோது அவர் அனுபவித்த சூழ்நிலைகள் குறித்து கருத்து தெரிவிக்க உள்ளார்.
ரணில் விக்கிரமசிங்க இந்த பயணத்தின் போது கிட்டத்தட்ட பத்து நாட்கள் லண்டனில் தங்கியிருப்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.