பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு (PNB) அதிகாரிகள் சுமார் ரூ. 3 மில்லியன் மதிப்பிலான கடத்தப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகள் மற்றும் சந்தேக நபரொருவரை இன்று (07) அதிகாலை கைது செய்தனர்.
சந்தேக நபர், அநுராதபுரம் பொத்தனேகம பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய முன்னாள் விமானப்படை வீரர் ஆவார். அவர் இன்று நள்ளிரவு 12:35 மணிக்கு FitsAir விமானத்தில் டுபாயிலிருந்து இலங்கை திரும்பியிருந்தார்.
Dubai-ல் வேலை தேடி டூரிஸ்ட் விசாவில் சென்ற நிலையில் வெற்றியடையாமல் நாடு திரும்பியதாகக் கூறப்படுகிறது. அவரின் வருகைக்குப் பின்னர், PNB அதிகாரிகள் அவரின் இரண்டு லக்கேஜ்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 20,000 வெளிநாட்டு சிகரெட் குச்சிகள் அடங்கிய 100 அட்டைப்பெட்டிகளைக் கண்டறிந்தனர்.
சந்தேக நபர் தற்போது பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு சட்டவிரோதமான இறக்குமதி, கடத்தல், மற்றும் சிகரெட்டுகளை வைத்திருந்தமைக்கான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. அவர் டிசம்பர் 18 ஆம் திகதி நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
