எல்ல சுற்றுலா நகரத்திற்கு அருகிலுள்ள எல்ல பாறை பகுதியில் ஏற்பட்ட தீ தற்போது எல்ல மலைத்தொடருக்கு முழுவதும் பரவும் அபாய நிலையை உருவாக்கியுள்ளது.

தீயை கட்டுப்படுத்துவதற்காக பண்டாரவளை வன பாதுகாப்பு அதிகாரிகள், எல்ல பிரதேச செயலகம், தியத்தலாவை விமானப்படை மற்றும் இராணுவ அதிகாரிகள் ஒருங்கிணைந்து தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
காற்றின் வேகம் மற்றும் செங்குத்தான சரிவுகள் காரணமாக தீயணைப்புப் பணிகள் பெரிதும் சவாலாக உள்ளது. மேலும், தீயின் பரவல் எல்ல-வெல்லவாய பிரதான வீதிக்கு அருகில் உள்ளதை கட்டுப்படுத்துவதற்காக பண்டாரவளை மாநகர சபையின் தீயணைப்பு வாகனங்களை உடனடியாகப் பயன்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.