எல்ல ஒடிசி கண்டி ரயில் சேவை இன்று முதல்

Date:

மிகவும் பிரபலமான பகுதியாக அடையாளம் காணப்பட்டுள்ள கண்டிக்கும் பதுளைக்கும் இடைப்பட்ட பகுதியின் இயற்கை அழகை பார்வையிட வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்காக ரயிவே திணைக்களம் இந்த ரயிலை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன்படி, கண்டியில் இருந்து காலை 9.45 மணிக்கு பயணித்த இந்த ரயில், பிற்பகல் 5.25க்கு தெமோதர நிலையத்தை சென்றடையும்.

இந்த ரயில் மீண்டும் தெமோதர ரயில் நிலையத்தில் இருந்து மாலை 6.00 மணிக்கு புறப்பட்டு நள்ளிரவு 12.00 மணிக்கு கண்டி ரயில் நிலையத்தை சென்றடையும்.

இந்த ரயில் ஒவ்வொரு வார இறுதியிலும் மட்டுமே இயக்கப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த ரயிலில் 176, முதல் வகுப்பு முன்பதிவு இருக்கைகளும், 176 இரண்டாம் வகுப்பு முன்பதிவு இருக்கைகளும், 44 மூன்றாம் வகுப்பு இருக்கைகளும் உள்ளன.

இந்த ரயில் பேராதனை, நாவலப்பிட்டி, ஹட்டன், கிரேட் வெஸ்டன், நானுஓயா, பட்டிப்பொல, ஒஹிய, இதல்கசின்ன, ஹப்புத்தளை, பண்டாரவளை மற்றும் எல்ல ஆகிய நிலையங்களில் மாத்திரம் நிறுத்தப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும் 10 நிமிடங்களுக்கு பாலத்தின் அருகே வளைவில் நிறுத்தப்படும்.

இதேவேளை, புதிய எல்ல ஒடிசி – நானுஓயா ரயிலை எதிர்வரும் 10ஆம் திகதி முதல் இயக்குவதற்கு ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

காலை 8.10 மணிக்கு நானுஓயா நிலையத்திலிருந்து தனது பயணத்தை ஆரம்பிக்கும் இந்த ரயில் இரவு 11.35 மணிக்கு பதுளை நிலையத்தை சென்றடையும்.

இந்த ரயில் மீண்டும் பதுளையில் இருந்து பிற்பகல் 1.00 மணிக்கு புறப்பட்டு மாலை 5.30 மணிக்கு நானுஓயா நிலையத்தை சென்றடையும்.

புதன், வியாழன், வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த ரயில்களை இயக்க ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதேவேளை, எல்ல ஒடிசி கொழும்பு கோட்டை ரயிலை

வார நாட்களில் பதுளை நிலையத்திற்கு இயக்குவதற்கு ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

கால அவகாசம் நிறைவு

அஸ்வெசும நலன்புரி உதவித் திட்டத்திற்கான மேல்முறையீட்டு காலம் நாளை (21) நிறைவடையவுள்ளது. அஸ்வெசும...

பிறப்பு அத்தாட்சிப் பத்திரத்துக்கு தந்தையின் பெயர் அவசியமில்லை

குழந்தை பிறந்தவுடன் பிறப்பு அத்தாட்சிப்பத்திரம் பதியும்போது பெற்றோர் திருமணம் முடித்துள்ளார்களா என்பது...

ஜகத் விதானகேயின் மகனுக்கு விளக்கமறியல்

சட்டவிரோதமாக பொருத்தப்பட்ட வாகனத்தை வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஐக்கிய மக்கள்...

பலத்த காற்று தொடர்பில் எச்சரிக்கை

பலத்த காற்று தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை அறிவிப்பை விடுத்துள்ளது.  மேல், சப்ரகமுவ,...