விசேட அதிரடிப்படையினர் (STF) வெள்ளிக்கிழமை (24) நடத்திய சிறப்பு நடவடிக்கையின் போது கல்கிசை கல்கிசை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விமலசிறி டி மெல் மாவத்தா பகுதியில் 29 வயதான சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

உறுதியான தகவலின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையின் போது பின்வரும் சட்டவிரோத பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன:
- 3.349 கிலோ “ஆஷ்” போதைப்பொருள்
- 25 கிராம் “குஷ்” போதைப்பொருள்
- 30 கிராம் “மாண்டி” போதைப்பொருள்
- 320 போதை மாத்திரைகள் மற்றும் 4,000 பேக்கிங் பாக்கெட்டுகள்
- 129 மதுபான முத்திரைகள், வாள், ஏர் பிஸ்டல் மற்றும் மின்சாதன வெயிங் இயந்திரங்கள்
- கார், மொபைல் போன் மற்றும் ரூ.1,250 ரொக்கப்பணம்
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் தெஹிவளையை சேர்ந்தவர் எனவும், சிறையில் உள்ள போதைப்பொருள் வியாபாரியின் கீழ் பணிபுரியும் போதைப்பொருள் விநியோகஸ்தராக செயற்பட்டு வந்தவர் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணைகளை கல்கிசை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.