பொதுப் போக்குவரத்திற்காக டிஜிட்டல் தொழிநுட்பம் மூலமான கட்டண முறையை அறிமுகப்படுத்த உள்ளதாக இலங்கை போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
பணப் பயன்பாட்டைக் குறைத்து பயணிகளுக்கு வசதியை வழங்குவதே இதன் நோக்கமாகும்.
வங்கி அட்டைகள் மூலமாகவும் பணத்தை செலுத்தலாம்.
இதன்படி, எதிர்காலத்தில் ஒவ்வொரு பஸ்ஸிற்கு டிஜிட்டல் தொழிநுட்பம் மூலமான கட்டணபயனச்சீட்டை பெற்றுக் கொள்வதற்கான உபகரணம் வழங்கப்படும் என்று போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.